யாழ் வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த 17 வயது சிறுமி!

0
183

யாழில் உள்ள பகுதியொன்றில் வீட்டில் பணிபுரிந்த சிறுமி ஒருவர் இன்றையதினம் (23-07-2023) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் வட்டுக்கோட்டை முதலி கோவிலடியைச் சேர்ந்த 17 வயதான கேதீஸ்வரன் தர்மிகா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழில் திடுக்கிடும் சம்பவம்: வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த 17 வயது சிறுமி! | 17 Year Old Girl Home Rescued As A Corpse Jaffna

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

கடந்த 4 மாதங்களாக சிறுமி கல்வியங்காடு சட்டநாதர் கோவில் அருகே உள்ள குறித்த வீட்டில் தங்கி நின்று வீட்டுப் பணி புரிந்துள்ளார்.

இவ்வாறான நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தங்கியிருந்த குடும்பத்தினர் நிகழ்வு ஒன்று சென்று விட்டு திரும்பி வந்து பார்க்கையில் குறித்த சிறுமி தூக்கில் தொங்கியவாறு காணப்பட்டுள்ளார்.

யாழில் திடுக்கிடும் சம்பவம்: வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த 17 வயது சிறுமி! | 17 Year Old Girl Home Rescued As A Corpse Jaffna

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த சிறுமியை பார்க்க யாரும் வரக்கூடாது என்று தெரிவித்த வீட்டு உரிமையாளர் மாதத்தில் ஒரு முறை மாத்திரம் கதைக்கமுடியும் என  தெரிவித்ததாக உறவினர்கள் குற்றஞ்சாட்டுவதுடன் இவ் உயிரிழப்பில் மர்மம் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

சடலத்தை பார்வையிட்ட தீடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.