குருந்தூர் மலைப் பிரச்னைக்கு தீர்வு காண முடியாது! அதற்கான காரணத்தை தெரிவித்த விதுர விக்கிரம நாயக்க

0
274

குருந்தூர் மலையில் நடைபெற்ற அசம்பாவிதம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கூறியுள்ளேன் என புத்த சாசன மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

குருந்தூர் மலை விவகாரத்தில் நீதி மன்றம் எடுக்கும் தீர்மானத்தை முழுமையாக செயற்படுத்துவேன் என்றும் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் எவரையும் திருப்திபடுத்தவும் பகைத்துக் கொள்ளவும் வேண்டிய தேவை கிடையாது.

குருந்தூர் விவகாரத்தை ஒருதரப்பினர் அரசியலுக்கு பயன்படுத்தியுள்ளதால் அந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாத நிலை தோற்றம் பெற்றுள்ளது எனவும் கூறியுள்ளார்.