பல காலம் தாண்டி தனது காதலை சொன்ன முதியவர்!

0
170

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வந்தவர்கள் தாமஸ் மெக்மேகின் மற்றும் நான்சி கம்பேல். பாடசாலை காலத்தில் ஒன்றாக படித்த போது இவர்கள் இருவருக்கும் இடையே ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால் இருவருமே வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருந்துள்ளார்கள். பாடசாலை படிப்பு முடித்ததும் இருவரும் பிரிந்துள்ளனர். பிறகு கல்லூரி முடித்து திருமணம் என இருவரும் வெவ்வேறு இடங்களுக்கு சென்று உள்ளனர்.

ஆனாலும் இளம் வயதில் ஏற்பட்ட அந்த காதல் மனதிற்குள் அப்படியே இருந்துள்ளது. 50 ஆண்டுகளுக்கு பிறகு மேக்மேகினும் நான்சி கம்பெல்லும் சந்தித்து உள்ளனர்.

10 ஆண்டுகள் கழித்து சந்தித்துள்ளனர்

10 ஆண்டுகள் கழித்து மீண்டும் 60வது ரியூனியன் நிகழ்ச்சியில் மீண்டும் சந்தித்து இருக்கிறார்கள்.

இப்போது இருவருமே குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்ததால் இருவருக்குமே திருமணம் செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் தோன்றியுள்ளது.

ஆனால் பள்ளி ரியூனியன் நிகழ்ச்சியில் பெரிதாக இதைப்பற்றி சொல்லிக் கொள்ளாது இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் மெக்மேகின் தனது காதலை எப்படியாவது வெளிப்படுத்தியிட வேண்டும் என்று எண்ணியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

@jobuns_ Replying to @jjayyciee ♬ original sound – Jojo

இளம் காதல் ஜோடிகள் போல தனது காதலை மெக்மேகின் வெளிப்படுத்தியது இணையதளத்தில் பலரும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் காதல் மறைந்து போகாது என்பதற்கு இது மிகச்சிறந்த உதாரணம் என்று பாரட்டி வருகின்றனர்.