மைத்திரி பங்கேற்ற நிகழ்வில் குளிர்பானங்களால் ஏற்பட்ட சர்ச்சை!

0
179

யாழ்ப்பாணத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கலந்து கொண்டிருந்த நிகழ்வுக்காகக் கொள்வனவு செய்யப்பட்ட குளிர்பானம் காலாவதியானமை பாதுகாப்பு அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

யாழ். உடுப்பிட்டி – மகளிர் கல்லூரியில் விளையாட்டு மைதானம் ஒன்றுக்கான நிதி உதவி வழங்கும் நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கலந்து கொண்டுள்ளார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்களுக்காக ஒழுங்கமைக்கப்பட்ட தேநீர் விருந்துக்காக உடுப்பிட்டியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் 4 குளிர்பான போத்தல்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

மைத்திரி பங்கேற்ற நிகழ்வில் குளிர்பானங்ளால் ஏற்பட்டுள்ள சர்ச்சை! | Expired Soft Drink At Maithiri S Event In Jaffna

இதனைப் பாதுகாப்பு பிரிவினர் பரிசோதித்தபோது அது காலாவதியானமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து சுகாதாரப் பிரிவு நடவடிக்கை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.