கருணா – தயா மாஸ்டரிடம் காட்டப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவரின் உடல்! வெடித்தது சர்ச்சை

0
218

இறுதி யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு என்ன நடந்தது என்ற விடயத்தை அரசாங்கம் நாட்டின் தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் மூடி மறைத்து பொய்களை சொல்லி வருகின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு பிரேத பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்றால் சட்ட வைத்திய அதிகாரி முன்னால் தான் நடத்தப்பட வேண்டும்.

ஆனால் அவ்வாறான ஒன்று நடந்ததாக அரசாங்கம் இதுவரை கூறவில்லை. அதைவிட ஒரு நீதிபதி முன்னால் தான் மரண விசாரணை நடைபெற வேண்டும்.

நீதிபதி தான் பிரேத பரிசோதனை நடத்துவதற்கான உத்தரவை வழங்க வேண்டும். அவ்வாறான எதுவும் இங்கு நடக்கவில்லை.

கருணாவையும், தயா மாஸ்டரையும் கொண்டு சென்று காட்டியவர்களுக்கு ஒரு நீதிபதியையும் அல்லது ஒரு சட்ட வைத்திய அதிகாரியையும் உலங்கு வானூர்தி மூலம் அழைத்துச் செல்வதற்கு அரசாங்கத்திற்கு என்ன தடை இருந்தது என கேள்வி எழுப்பியுள்ளார்.