இந்த 4 முறையில் கடவுச்சீட்டை எளிமையாக பெறலாம்!

0
154

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இணையதளம் மூலம் கட்வுச்சீட்டு பெறுவதற்கு நான்கு எளிமைப்படுத்தப்பட்ட செயல்முறையை அரசாங்கம் கோடிட்டுக் காட்டியுள்ளது.

ஆன்லைன் கடவுச்சீட்டு முறைமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஹோமாகம பிரதேச செயலகத்தில் நேற்று (15) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

பொது பாதுகாப்பு அமைச்சு மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அறிவிப்பின்படி, பொதுமக்கள் பின்வரும் முறையில் ஆன்லைன் முறையின் மூலம் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

நான்கு செயல்முறைகள்

  • Visit www.immigration.gov.lk
  • உங்கள் தனிப்பட்ட மொபைல் ஃபோனுக்கு அனுப்பப்பட்ட கடவுச்சொல்லை உள்ளிடவும்.
  • உங்கள் அசல் ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களைப் பதிவேற்றவும்.
  • உங்கள் கைரேகையை சம்பந்தப்பட்ட பிரதேச செயலகத்தில் வழங்கவும்.  

மேலதிக விசாரணைகள் இருப்பவர்கள் அதிகாரிகளை 0112 101500 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.