இலங்கையில் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்குமாறு  அமெரிக்கா கோரிக்கை

0
315

கருத்துச் சுதந்திர உரிமையைப் பாதுகாக்குமாறு இலங்கைக்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.

ஒவ்வொரு குடிமகனுக்கும் கருத்துச் சுதந்திரம் என்பது ஒவ்வொரு ஜனநாயகத்தின் அடிப்படையானது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்தின் அடிப்படையிலும் ஒவ்வொரு குடிமகனுக்கும் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமை உள்ளது.

இந்த அடிப்படை உரிமையைப் பாதுகாப்பது, அனைத்து இலங்கையர்களுக்கும் நிலையான பாதுகாப்பான மற்றும் வளமான எதிர்காலத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளுக்கு ஒரு அடிப்படையாக இருக்க வேண்டும் என்றும் தூதுவர் ட்வீட் செய்துள்ளார்.