தாமரை கோபுர சுவரில் எழுதிக் கொண்டிருந்த இளம் ஜோடி கைது!

0
345

கொழும்பு தாமரை கோபுரத்தை பார்வையிட சென்ற இளம் தம்பதி கோபுரத்தின் சுவரில் எழுதும் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த தமபதி நேற்று (30) மாலை அங்கிருந்த பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தாமரை கோபுரத்தை பார்வையிட வருபவர்கள் அதன் உடைமைகளை சேதப்படுத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாமரை கோபுரத்திற்கு சென்ற இளம் தம்பதி செயலால் கடுப்பான அதிகாரிகள்! | Young Couple Went To The Lotus Tower

மேலும் இவ்வாறான செயற்பாடுகளால் தாமரை கோபுர பராமரிப்புக்கு பாரிய செலவு ஏற்படும் என அதிகாரிகள்  சுட்டிக் காட்டியுள்ளனர்.

அதேசமயம் மக்களின் பணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த சொத்தை பாதுகாப்பது மக்களின் பொறுப்பு என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.