போலீஸ் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை சேதப்படுத்தியதாக போலீசார் கைது

0
171

ஜா-எல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் ஜீப் பொலிஸ் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது அதனைச் சேதப்படுத்தி ஆபாசமான வார்த்தைகள் எழுதப்பட்டிருந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் அதே பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவரைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் இரவு வேளையில் பொலிஸ் வளாகத்தில் ஜீப் நிறுத்தப்பட்டிருந்தபோது நபர் ஒருவரால் அவ் வாகனம் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசேட புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேலும் சந்தேகத்தின் பேரில் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (30) கைது செய்யப்பட்ட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.