இலங்கையில் கொடிய விஷ பாம்புக்கு அறுவை சிகிச்சை

0
180

இலங்கையில் கொடிய விஷம் கொண்ட நாகத்துக்கு சத்திரசிகிச்சை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நாக பாம்பின் வயிற்றுப் பகுதியில் காணப்பட்ட கட்டியால் ஏற்பட்ட வலி காரணமாக இந்த சிகிச்சை இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இந்த நாகப்பாம்பு இரண்டரை மாதங்களுக்கு மேல் சாப்பிட முடியாமல் தவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பாம்பிற்கு சத்திரசிகிச்சை அளித்த கால்நடை வைத்தியர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தகவல் கிடைத்ததை அடுத்து பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை வைத்திய பீடத்திலுள்ள வன ஜீவராசிகள் பிரிவு வைத்தியர்களுடன் இணைந்து இந்த நாகபாம்பிற்கு சத்திரசிகிச்சை செய்து கட்டி அகற்றப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.