முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் சமிந்த சிறிசேனவின் கோடி ரூபா பெறுமதியான நீலக்கல் மோதிரம் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பொலன்னறுவை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகம்
ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான சுமார் 6 பவுண் தங்க மோதிரம், ஐம்பது அமெரிக்க டொலர் மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் ரொக்கப்பணம் திருடப்பட்டுள்ளதாக சமிந்த சிறிசேனவினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்தனர்.
![முன்னாள் ஜனாதிபதி மைத்திரி வீட்டில் இப்படி ஒரு சம்பவம் | Incident Happened At Former President House முன்னாள் ஜனாதிபதி மைத்திரி வீட்டில் இப்படி ஒரு சம்பவம் | Incident Happened At Former President House](https://cdn.ibcstack.com/article/2cef94ec-9033-4336-bd58-251be50e7c0c/23-64759d7c4b37e.webp)
பொலன்னறுவை, அதுமல்பிட்டிய பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்தே நீலக்கல் மோதிரம் மற்றும் பணம் திருடப்பட்டுள்ளதாக அவர் முறைப்பாடளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலன்னறுவை பொலிஸார், இதுவரை யாரும் கைதுசெய்யப்படவில்லை எனவும் கூறுகின்றனர்.