நெடுந்தீவு கடலில் தத்தளித்த பயணிகள்; உதவிய மீனவர்கள்!

0
208

நெடுந்தீவிலில் இருந்து குறிகட்டுவான் வந்த சமுத்திரதேவா படகின் சுக்கான் உடைந்த நிலையில் பயணிகள் கடலில் அந்தரித்த நிலையில் மீனவர்களின் உதவியுடன் கரைக்கு சேர்ந்துள்ளனர்.

இன்று(23) காலை நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கிப் பயணித்த சமுத்திரதேவா படகின் சுக்கான் உடைந்தமையால் நெடுந்தீவுக்கான போக்குவரத்துத் தடைப்பட்டது.

இந்நிலையில் சுமார் 70 பயணிகளுடன் பயணித்த சமுத்திரதேவா மலையடிப் பகுதியை அண்மித்தபோது அதன் சுக்கான் உடைந்துள்ளது.

அந்தப் பகுதியில் நின்ற படகின் உதவியுடன் படகு நடத்துனர்கள் சாதுரியமாகச் செயற்பட்டு பயணிகளைப் பாதுகாப்பாக குறிகட்டுவான் துறைமுகத்துக்குக் கொண்டுவந்து சேர்த்துள்ளனர்.