நீர்த்தேக்கங்களினால் ஏற்படக்கூடிய அபாய நிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

0
175

நாட்டின் நிலவும் கடும் மழை காரணமாக பல முக்கிய ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் (06.05.2023) ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அத்தனகலு ஓயா, களனி, நில்வலா, களு மற்றும் ஜின் ஆகிய ஆறுகளின் நீர் மட்டம் தற்போது அதிகரித்து வருகின்றது.

அபாயம் இல்லை 

நாடளாவிய ரீதியில் உள்ள பிரதான நீர்ப்பாசன நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு 67 வீதம் நிரம்பியுள்ளன.

எனினும், மழைவீழ்ச்சியின் தரவுகளின்படி, அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் எந்த முக்கிய ஆறுகளும் வெள்ள மட்டத்தை எட்டும் அபாயம் இல்லை எனத் திணைக்களத் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையில், நிலவும் கடும் மழை காரணமாக நாடு முழுவதும் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு முன்னெச்சரிக்கை எச்சரிக்கையைத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நீடித்துள்ளது.