அம்மன் சிலையை அகற்ற முற்பட்டவர் விரைவில்  வெளியேறுவார்; விக்கினேஸ்வரன் ஆவேசம்!

0
185

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நாகபூசணி அம்மன் சொரூபத்தை அகற்றக்கோரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியவர் விரைவில் யாழ்ப்பாணத்திலிருந்து வௌியேறுவார் என நாடாளுமன்ற உறுப்பினரும் நீதியரசரசருமான சி.வி விக்னேஸ்வரன் காட்டமாக தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளரால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், 

அனுமதிகள் பெறாது அமைக்கப்பட்டதாக  முறைப்பாடு

பண்ணை பகுதியில் அமைந்துள்ள நாகபூசணி அம்மன் உரிய அனுமதிகள் பெறாது அமைக்கப்பட்டதாக தெரிவித்து ஒருவர் முறைப்பாடு வழங்கியதாக அறிகிறேன்.

அவரது முறைப்பாட்டை பொலிசார் ஏற்றது பிரச்சினை இல்லை. ஆனால் மாவட்டத்தில் உரிய முறையில் அனுமதி பெற்றா வழிபாட்டு இடங்கள் அமைக்கப்படுகின்ற என்பதை பொலிசாரிடம் கேட்க விரும்புகிறேன்.

நாட்டில் சட்டம் யாவருக்கும் சமன் சட்டத்தை உரிய முறையில் பொலிசார் நடைமுறைப்படுத்த வேண்டும்.

நாகபூசணி அம்மன் சிலை தொடர்பில் முறைப்பாடு வழங்கியவர் யார் என்பது இதுவரை வெளிவராத நிலையில் யாழ்ப்பாணத்தை விட்டு விரைவில் வெளியேறுவார்போல தெரிகிறது எனவும் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.