துவிச்சக்கர வண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி இளைஞன் உயிரிழப்பு !

0
240

துவிச்சக்கர வண்டி நாயின் மீது மோதி வேகக்கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதில் சாரதி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இந்த விபத்தில் மிஹிந்தலை நாமல் ஏரியைச் சேர்ந்த அசென் இசுரா (24) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தின் போது முச்சக்கர வண்டிக்கு பின்னால் வந்த மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்களும் படுகாயமடைந்த நிலையில் மிஹிந்தலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து மேலதிக சிகிச்சைக்காக இளைஞர்கள் அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.