தமிழகத்தில் பிரபலமான விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இலங்கைப் பெண் லாஸ்லியா.
இவர் பிக்பாஸ் சீசன் 3யில் போட்டியாளராக பங்குபெற்று 3 ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டதோடு பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களையும் கவர்ந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து படத்தில் நடித்து வரும் நடிகை லாஸ்லியா சமூக வலைத்தளங்களில் ஆர்வம் காட்டிவரும் நிலையில் விதம்விதமாக போட்டோசூட்களை நடத்தி அதனை பகிர்ந்து வருகின்றார்.
இவ்வாறான நிலையில் இன்றைய தினம் உயிர்த்த ஞாயிறு தினம் உலக வாழ் கிறிஸ்தவ மக்களால் கொண்டாடப்படும் நிலையில் அதற்கு வாழ்த்து தெரிவித்து சில புகைப்படங்கள் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.