கொழும்பு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

0
237

கொழும்பின் பல பகுதிகளில் இன்றைய தினம் (09-04-2023) நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு 01, 02, 03, 04, 07, 08, 09, 10 மற்றும் 11 ஆகிய பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மேற்படி பிரதேசங்களுக்கு நாளை நண்பகல் 12 மணித்தியாலம் வரை குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் எனவும் நீர் வழங்கல் சபை அறிவித்துள்ளது.

இதனால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்கு நீர் வழங்கல் சபை வருத்தம் தெரிவித்துள்ளது.