அரசியலில் இருந்து விலகும் ரோசி சேனாநாயக்க!

0
239

அரசியலில் இருந்து ஓய்வுபெறவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரும் கொழும்பு மாநகரசபையின் முன்னாள் மேயருமான ரோசி சேனாநாயக்க தெரிவித்தார்.

இம்முறை மாத்திரமே தேர்தலில் போட்டியிடுகின்றேன். இனி போட்டியிடபோவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

கட்சியை விட்டு செல்லமாட்டேன்

அதோடு தான் கொள்கை அடிப்படையில் அரசியல் நடத்தும் நபர். எனவே, ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு செல்லமாட்டேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

தேசிய அரசியலில் இருந்து ஓய்வுபெற திட்டமிட்டேன். கொரோனா, பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் மேயராக சில வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியாமல் போனது.

எனவே, திட்டங்களை முன்னெடுக்கவும், நான் தலைமைத்துவம் வழங்கிய அணிக்காகவுமே இம்முறை போட்டியிடுகின்றேன். இனிமேல் தேர்தலில் களமிறங்கமாட்டேன் என்றும் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.