திருகோணமலையில் மீண்டும் உணரப்பட்ட நில அதிர்வு..

0
225

திருகோணமலை கோமரன்கடவல மற்றும் கிரிந்த பிரதேசங்களில் சிறியளவில் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெக்னிரியூட் அளவு கோளில் 3.0 ரிக்டர் அளவில் உணரப்பட்டதாக புவியியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை 3.30 மணியளவில் கோமரங்கடவல பகுதியிலும் நிலஅதிர்வு ஒன்று பதிவாகி உள்ளது.

இதேவேளை கிரிந்த பிரதேசத்தில் உணரப்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.6 ஆக பதிவாகியுள்ளதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது.