வருடாந்த திருவிழா இந்திய இலங்கை பக்தர்களுடன் கோலாகலமாக ஆரம்பமானது கச்சதீவு அந்தோணியார்!

0
297

நீண்டகாலத்தின் பின்னர் பெருமளவான இலங்கை இந்திய பக்தர்களின் பங்கேற்புடன் கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சபம் நேற்று மாலை 4 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

தொடர்ந்து பாதை சிலுவை ஆலயத்தை சுற்றி வலம் வரும் நிகழ்வும் இடம்பெற்றது.

இந்திய இலங்கை பக்தர்களுடன் கோலாகலமாக ஆரம்பமான கச்சதீவு அந்தோனியார் வருடாந்த உற்சபம்! | Kachathivu Anthony Annual Festival Started

திருப்பலி ஒப்புக்கொடுப்பு

இம்முறை வருடாந்த கச்சை தீவு உற்சவத்திற்கு இலங்கை கடற்படை, இந்திய துணை தூதவராலயம், இலங்கையின வெளிவிவகார ஆமைச்சு ஆகியன முழுமையான பங்களிப்பை வழங்கியுள்ளது.

இன்று சனிக்கிழமை காலை 7 மணியளவில் யாழ். மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் தலைமையில் திருப்பலி ஒப்புக் கொடுக்கபடவுள்ளது.

இந்திய இலங்கை பக்தர்களுடன் கோலாகலமாக ஆரம்பமான கச்சதீவு அந்தோனியார் வருடாந்த உற்சபம்! | Kachathivu Anthony Annual Festival Started

இதன் பொழுது 60 நாட்டு படகுகளிலிருந்தும் 16 இழுவை மடி படகுகளிலுமாக இந்தியாவிலிருந்து 2100 பக்தர்களும் இலங்கையிலிருந்து இலங்கை கடற்படையினரின் படகுகள் மூலமும் ஏனைய தனியார் படகுகளிலிருந்தும் 2800 பக்தர்களும் மொத்தமாக பக்தர்கள் 4900 பேரும் அந்தோனியார் பெருவிழாவில் கலந்து கொள்ளவுள்ளனர்.

அதோடு அதிகாரிகள், வியாபாரிகள் 200 பேர் என மொத்தமாக 5100 பேர் கச்சை தீவு பெருநாளில் கலந்து கொண்டுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.

இந்திய இலங்கை பக்தர்களுடன் கோலாகலமாக ஆரம்பமான கச்சதீவு அந்தோனியார் வருடாந்த உற்சபம்! | Kachathivu Anthony Annual Festival Started