ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு தங்கள் கூட்டத்தில் எந்த அமைப்பை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் பேசுவதற்காக அனுமதித்துள்ளது.
இதை பயன்படுத்தி கைலாசாவை ஐ.நா அங்கீகரித்தது போல் பொய்யான தோற்றத்தை நித்தியானந்தா ஏற்படுத்தியுள்ளார்.
துஷ்பிரயோக புகாரில் சிக்கிய சாமியார் நித்தியானந்தா இந்தியாவை விட்டு தப்பிச் சென்று ‘கைலாசா’ என்ற தனி நாட்டை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் ஜெனிவாவில் கடந்த மாதம் 24ம் திகதி ஐ.நா அமைப்பின் பொருளாதார, சமூக மற்றும் காலாச்சார உரிமைகள் குழு கூட்டம் நடந்துள்ளது.
இதில் ‘கைலாசா குடியரசு’ சார்பில் நித்தியானந்தாவின் பிரதிநிதிகளாக பெண்கள் சிலர் கலந்து கொண்டனர்.
இது தொடர்பான புகைப்படங்கள் நித்தியானந்தாவின் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு கைலாசாவை ஐ.நா அங்கீகரித்தது போல் பொய்யான தோற்றத்தை உருவாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.