பீகாரின் சமஸ்திபூரில் கணவருடனான 10 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு, பெண் ஒருவர் கணவரின் தங்கையையே திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.
கணவரின் தங்கையை மணந்த பெண்
பீகாரின் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள ரோசரா பிளாக்கில் வசிக்கும் 32 வயதான சுக்லா தேவி என்ற இரண்டு குழந்தைகளின் தாய், கணவர் பிரமோத் தாஸ் உடன் 10 ஆண்டுகளுக்கு மேலாக குடும்பம் நடத்தி வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் சுக்லா தேவி தனது கணவர் பிரமோத் தாஸ் அவர்களின் தங்கை சோனி தேவியை (18) திருமணம் செய்து கொண்டுள்ளார்.
மேலும் பிரமோதின் மனைவி தன் மைத்துனியை மணந்து ஒரே வீட்டில் கணவன்-மனைவியாக வாழ தொடங்கியுள்ளார்.
இதற்கிடையில் தனது காதல் இணைக்கு கணவன் தோற்றம் கொடுப்பதற்காக சுக்லா தேவி தனது தோற்றம், உடை என ஆகியவற்றை முழுவதுமாக ஆண் போல மாற்றியுள்ளார்.
கணவருக்கு ஆட்சேபனை இல்லை
மனைவி சுக்லா தேவியின் இந்த மாற்றத்திற்கு கணவர் பிரமோத் தாஸ் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, மாறாக மனைவி மகிழ்ச்சியாக இருந்தால் தானும் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இந்த செய்தி குடும்பத்தின் மீது மோசமான வெளிச்சத்தை ஏற்படுத்துகிறது என்ற பார்வையில் கோபமடைந்த அவரது மாமியார் சம்பவ இடத்திற்கு வந்து சோனி தேவியை வலுக்கட்டாயமாக அவர்களுடன் அழைத்துச் சென்றார்.
ஆனால் சுக்லா தேவியோ மாமியாரின் செயலால் கோபமடைந்து காவல்துறையில் வழக்குப் பதிவு செய்து, விஷயத்தை பகிரங்கப்படுத்தியுள்ளார்.