தேர்தல் நடத்தலாமா? வேண்டாமா? முடிவு இன்று வெளியாகும்!

0
214

இலங்கையில் 2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டபடி மார்ச் 09 ஆம் திகதி நடத்தலாமா வேண்டாமா என்பது குறித்து முடிவெடுப்பதற்காக இலங்கை தேர்தல் ஆணைக்குழு இன்று கூடுகிறது.

உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று ஏற்கனவே ஆணைக்குழு உறுப்பினர்களால் ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜி.புஞ்சிஹேவா உறுதியளித்துள்ளார்.

தேர்தல் நடத்தலாமா? வேண்டாமா? இன்று வெளியாகவுள்ள முடிவு! | Can Elections Be Held Don T You The Result

அண்மையில் ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள் ஐவரும் பங்குபற்றிய ஊடகவியலாளர் சந்திப்பில் இது அறிவிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேர்தலுக்குத் தேவையான அனைத்து வர்த்தமானி அறிவித்தல்களிலும் அவர்கள் ஐவரும் ஏற்கனவே கையொப்பமிட்டுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை நேற்று நாடாளுமன்றில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளூராட்சி தேர்தல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.