யாழில் பண்ணை கடலில் கரையொதுங்கிய பெண்ணின் சடலத்தால் பரபரப்பு!

0
354

யாழ்ப்பாணம் பண்ணை கடலில் பெண் ஒருவரது சடலம் மிதந்தவாறு கரையொதுங்கியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று பிற்பகல் கரையொதுங்கிய குறித்த சடலம் இதுவரை இனங்காணப்படவில்லை என கூறப்படுகின்றது.

குறித்த சடலம் கரை ஒதுங்கிய நிலையில் பொதுமக்களால் கண்டுபிடிக்கப்பட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் கரையொதுங்கிய பெண்ணின் சடலத்தால் பரபரப்பு!(Photos) | Body Of A Woman Who Was Strangled

  பொலிஸார் விசாரணை

அந்த பெண் தானாகவே கடலில் குதித்து தற்கொலை செய்துகொண்டாரா அல்லது யாராவது கொலை செய்து கடலில் வீசியுள்ளார்களா என்பது தொடர்பில் தற்போது யாழ்ப்பாண காவல்துறையினர் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

யாழில் கரையொதுங்கிய பெண்ணின் சடலத்தால் பரபரப்பு!(Photos) | Body Of A Woman Who Was Strangled

இதேவேளை, குறித்த கடற்கரைப் பகுதிக்கு வந்த நபர் ஒருவர் தனது தாயாரைக் காணவில்லையென காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். எனினும் நீதவான் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆகியோர் குறித்த பகுதிக்கு வரும் வரை சடலம் மீட்கப்பட முடியாது என்பதால் அடையாளம் காண்பதற்காக காவல்துறையினர் கத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

யாழில் கரையொதுங்கிய பெண்ணின் சடலத்தால் பரபரப்பு!(Photos) | Body Of A Woman Who Was Strangled