தாயின் இரண்டாவது கணவரால் 11 வயது சிறுவன் கொலை!

0
302

காத்தான்குடி பகுதியில் 11 வயது சிறுவன் ஒருவன் கொடூரமாக தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளார். சிறுவனின் தாயின் இரண்டாவது கணவரே சிறுவனை தாக்கியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சிறுவன் சந்தேக நபரால் தாக்கப்பட்டு மட்டக்களப்பு வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறுவனின் தந்தை கடந்த 8ஆம் திகதி காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதன்படி மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்றில் நேற்று (9) சந்தேகநபர் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் சந்தேகநபரை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

எனினும் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு மட்டக்களப்பு வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் நேற்று (09) பிற்பகல் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி பொலிசார் இன்று (10) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் விடயங்களை முன்வைக்க உள்ளதோடு மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.