துருக்கி நிலநடுக்கம்; இரங்கல் தெரிவித்த மஹிந்த!

0
402

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ துருக்கியில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் நேர்ந்த உயிரிழப்புகளுக்காக அனுதாபம் தெரிவித்துள்ளார்.

அங்கு உயிரிழந்தவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் நோக்கில் மஹிந்த ராஜபக்ஷ இலங்கையில் உள்ள துருக்கி தூதரகத்துக்கு சென்று அங்குள்ள அனுதாபப் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.

அத்துடன் இலங்கை மக்களின் பிரார்த்தனைகள் துருக்கிய அரசாங்கத்துடனும் மக்களுடனும் உள்ளதாகவும் மஹிந்த தெரிவித்தார்.   அதேவேளை துருக்கியில் ஏற்பட்ட பூகம்பத்தால 15000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

துருக்கி நிலநடுக்கம்; இரங்கல் தெரிவித்த மஹிந்த! | Turkey Earthquake Condolence Mahinda