உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் செயல்பட்டுவரும் கேளிக்கை பூங்கா நிறுவனமான வால்ட் டிஸ்னியில் ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகளாவிய மிகப்பெரிய கேளிக்கை பூங்கா நிறுவனம் வால்ட் டிஸ்னி. பல்வேறு நாடுகளில் வால்ட் டிஸ்னி கேளிக்கை பூங்கா பல்வேறு நாடுகளில் உள்ளது.
வால்ட் டிஸ்னியில் மொத்தம் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இதனிடையே கொரோனா காலத்தில் 2020 ம் ஆண்டு வால்ட் டிஸ்னி 32 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது.
இந்த நிலையில் 5.5 அமெரிக்க டொலர்கள் செலவை மிச்சப்படுத்த 7 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக வால்ட் டிஸ்னி நிறுவனம் அறிவித்துள்ளது. 7 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம் தொடர்பான அறிவிப்பை டிஸ்னி விரைவில் வெளியிட உள்ளது.