10 வயது சிறுமி துஷ்பிரயோகம்; 72 வயதான முதியவருவருக்கு 10 வருட சிறைத்தண்டனை!

0
256

லுணுகம்வெஹர, பதவிகம பகுதியில் பத்து வயது சிறுமியை கடுமையாக துஷ்பிரயோகம் செய்த 72 வயதுடைய ஒருவருக்கு 10 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் 13 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் சந்தேக நபருக்கு கடூழிய சிறை தண்டனை விதித்து ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்ற நீதிபதி பிரியந்த லியனகே உத்தரவிட்டார்.

மேலும் 10,000 ரூபா அபராதம் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 100,000 ரூபா இழப்பீடு செலுத்தவும் உத்தரவிடப்பட்டது. லுணுகம்வேரே, பதவிகமவில் வசித்துவரும் 72 வயதான திருமணமாகாத நபருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டது.