வேலன் சுவாமிகள் கைது செய்யப்பட்டமையை கண்டித்து யாழ்.பல்கலைகழகம் முன்பாக மாணவர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
இன்று காலை பல்கலைக்கழக நுழைவாயிலுக்கு முன்பாக கூடிய பல்கலைக்கழக மாணவர்கள் அமைதியாக கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
ஜனநாயக ரீதியான போராட்டங்களை தடுக்கும் வகையில் இடம்பெறும் கைதுகளை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்த மாணவர்கள் தொடர்ச்சியாக இதற்கெதிராக தாங்கள் குரல் கொடுப்போம் எனவும் தெரிவித்தனர்.