வேலன் சுவாமிகள் கைது செய்யப்பட்டமையை கண்டித்து யாழ்.பல்கலைகழகம் முன்பாக மாணவர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
இன்று காலை பல்கலைக்கழக நுழைவாயிலுக்கு முன்பாக கூடிய பல்கலைக்கழக மாணவர்கள் அமைதியாக கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
![யாழ்.பல்கலைகழக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்(Photos) | Jaffna University Students Protest யாழ்.பல்கலைகழக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்(Photos) | Jaffna University Students Protest](https://cdn.ibcstack.com/article/fcad61f1-565b-4592-aaa9-8d9f63c84fbf/23-63c8fcbdcd4fa.webp)
ஜனநாயக ரீதியான போராட்டங்களை தடுக்கும் வகையில் இடம்பெறும் கைதுகளை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்த மாணவர்கள் தொடர்ச்சியாக இதற்கெதிராக தாங்கள் குரல் கொடுப்போம் எனவும் தெரிவித்தனர்.