யாழில் ஆடு மேய்க்க சென்ற இளைஞன் சடலமாக மீட்பு!

0
350

யாழ்.அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்துார் – வாதரவத்தை பகுதியில் ஆடு மேய்க்க சென்றிருந்த இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றைய தினம் மாலை ஆடு மேய்ப்பதற்காக சென்றிருந்த வாதரவத்தை – பொிய பொக்கணை பகுதியை சேர்ந்த செ.ராகுலன் (வயது25) என்ற இளைஞன் இன்று காலை ஆகியும் வீடு திரும்பவில்லை.

நீரில் மூழ்கி உயிரிழப்பு

இந்நிலையில் இளைஞனின் தந்தை இளைஞனை தேடிச் சென்றிருந்தபோது நீரில் மூழ்கி அவர் உயிரிழந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

யாழில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!(Photos) | The Incident That Caused A Stir In Jaffna
யாழில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!(Photos) | The Incident That Caused A Stir In Jaffna

குறித்த இளைஞர் வலிப்பு காரணமாக நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தொியவந்துள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.