மொத்தம் 145,000 டன் உக்ரைன் கோதுமையை ஏற்றிச் சென்ற நான்கு கப்பல்கள் ஒடெசா துறைமுகத்தில் இருந்து ஆசியாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக உக்ரைன் உள்கட்டமைப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த நான்கு கப்பல்களில் 71,000 டன் கோதுமை அடங்கிய பெரிய கேரியர் ஒன்று இந்தோனேசியாவுக்குச் செல்லும் என்று அமைச்சகம் அறிவித்தது .
தற்போது 23 கப்பல்கள் செயலாக்கத்தில் உள்ளன, அவற்றில் 734,000 டன் உக்ரேனிய விவசாய பொருட்கள் இருப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மூன்று கப்பல்கள் 166 ஆயிரம் டன் விவசாய பொருட்களை ஏற்றிக்கொண்டு தானிய வழித்தடத்தில் நகர்கின்றன என்று அது குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் 92 கப்பல்கள் போஸ்பரஸில் உள்ள கூட்டு ஒருங்கிணைப்பு மையம் ஆய்வுக்காகக் காத்திருக்கின்றன என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.