போட்டிக்கு ஓடிய பேருந்துகள்; நூலிழையில் உயிர்தப்பிய பயணிகள்..வவுனியாவில் சம்பவம்!

0
251

வவுனியாவில் இரு பேருந்துகள் போட்டிக்கு ஓடியதில் அவற்றில் ஒரு பேருந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

வவுனியா – மன்னார் வீதி சாம்பல்தோட்டம் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகே நேற்று (17.12.2022) இவ்விபத்து நேர்ந்துள்ளது.

வவுனியாவிலிருந்து பூவரசங்குளம் வீதியூடாக செட்டிக்குளம் செல்லும் தனியார் பேருந்தும் வவுனியாவிலிருந்து மன்னார் செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான ஒரு பேருந்தும் குறிப்பிட்ட இடத்தில் ஒன்றையொன்று முந்திச் சென்றவாறு போட்டிக்கு ஓடிச் சென்றுள்ளன.

கட்டுப்பாட்டை இழந்து விபத்து

இதன்போது சாம்பல் தோட்டம் பகுதியில் பயணித்த கொண்டிருந்த தனியார் பேருந்து, சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியினை விட்டு கீழிறங்கி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் பயணிகளுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றார்கள்.