இஷாலினியின் மரண விசாரணை; அடுத்த வருடம் வரை ஒத்தி வைப்பு!

0
1595

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில், உயிரிழந்த இஷாலினியின் மரணம் தொடர்பிலான மரண விசாரணை சாட்சிப் பதிவுகள் அடுத்த வருடம் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பீ/ 52944/02/21 எனும் குறித்த வழக்கு நேற்றையதினம் மரண விசாரணை சாட்சிப் பதிவுக்காக விசாரணைக்கு வந்தது. கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

இதன்போது 4 ஆம் இலக்க சாட்சியாளரின் சாட்சியத்தைப் பெற்றுக்கொள்ள, தமிழ் மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியை பெற்றுக்கொள்ள முடியாமல் போனது.

இஷாலினி விவகாரம் ; சாட்சிப் பதிவுகள் அடுத்த வருடத்திற்கு ஒத்திவைப்பு | Ishalini Affair Witnesses To Next Year

அதேவேளை இவ்வாறு மொழி பெயர்ப்பாளரின் உதவியைப் பெற முடியாமல் போகும் 2 ஆவது சந்தர்ப்பம் இதுவாகும். இதனையடுத்து வழக்கின் மரண விசாரணை சாட்சிப் பதிவுகள் எதிர்வரும் 2023 ஜனவரி 10 ஆம் திகதிவரை ஒத்தி வைக்கப்பட்டது.