சுக்கான் மீது இருந்து 11 நாட்கள் பயணம்செய்த புலம்பெயர்ந்தவர்கள்!

0
575

நைஜீரியாவில் இருந்து கேனரி தீவுகளுக்கு வந்த கப்பலில் 11 நாட்களாக எண்ணெய் டேங்கரின் சுக்கான் மீது இருந்த புலம்பெயர்ந்தவர்கள் 3 பேரை ஸ்பெயின் கடலோர காவல்படையினர் மீட்டனர்.

குறைந்த அளவு இடம் மட்டுமே இருந்ததால் அவர்கள் படுக்கவோ, நேராக உட்காரவோ முடியாமல் இருந்ததாக அவர்களின் படத்தை வெளியிட்டு ஸ்பெயின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் நடப்பாண்டின் முதல் 10 மாதங்களில் ஸ்பெயினின் கேனரி தீவிற்கு 14 ஆயிரத்து 875 புலம்பெயர்ந்தவர்கள் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.