சிறுமி குளிக்கும் போது தொலைபேசியில் வீடியோ எடுத்த இளைஞன்; யாழில் சம்பவம்!

0
574

17 வயதைச் சேர்ந்த சிறுமி குளிக்கும் போது அதனை மறைந்திருந்து 21 வயதுடைய இளைஞர் ஒருவர் தொலைபேசியில் காணொளி எடுத்துள்ளார்.

இச் சம்பவம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம் பெற்றுள்ளது.

இதனை அவதானித்த ஊர் மக்கள் குறித்த இளைஞனை பிடித்து கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இளைஞன் காணொளி எடுப்பதை குளித்துக்கொண்டிருந்த சிறுமி எதேர்சையாக கண்டுள்ளார்.

அவர் அலறிய சத்தம் கேட்டு அயலவர்கள் அங்கு வந்துள்ளதோடு காணொளி எடுத்த இளைஞனை மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

வட்டுக்கோட்டை அராலியைச் சேர்ந்த இளைஞனே இவ்வாறு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.