மஞ்சள் தாலி கயிற்றை மாற்றிய நயன்தாரா! வெளியாகிய புதிய புகைப்படம்

0
2168

திருமணமானதும் மஞ்சள் தாலி கயிற்றுடன் வலம்வந்த நயன்தாரா தங்க செயினாக மாற்றியுள்ளார்.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படுகிறார். ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கால்பதித்துவிட்டார்.

மஞ்சள் தாலி கயிற்றை மாற்றிய நயன்தாரா! வெளியான புதிய புகைப்படம் | Nayanthara Change Thali

கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி தனது நீண்டநாள் காதலரான விக்னேஷ் சிவனை கரம்பிடித்தார், சிவப்பு நிற புடவையில் நயன்தாராவும், பட்டு வேஷ்டி சட்டையில் விக்னேஷ் சிவனும் ஜொலிக்க திரைப்பிரபலங்கள், சொந்த பந்தங்களுடன் வெகு விமர்சையாக திருமணம் நடந்து முடிந்தது.

மஞ்சள் தாலி கயிற்றை மாற்றிய நயன்தாரா! வெளியான புதிய புகைப்படம் | Nayanthara Change Thali

தொடர்ந்து தாய்லாந்து, ஐரோப்பிய நாடுகளில் ஹனிமூனை கொண்டாடினர், கழுத்தில் மஞ்சள் தாலி கயிற்றுடன் கணவருடன் ரொமான்ஸ் செய்த தம்பதிகளின் புகைப்படங்கள் வைரலானது.

மஞ்சள் தாலி கயிற்றை மாற்றிய நயன்தாரா! வெளியான புதிய புகைப்படம் | Nayanthara Change Thali

இந்நிலையில் கடந்த அக்டோபர் 9ம் தேதி இரட்டை மகன்களுக்கு பெற்றோராகியிருப்பதாக அறிவித்தார் விக்னேஷ் சிவன், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றதாக தெரியவந்தது.

மஞ்சள் தாலி கயிற்றை மாற்றிய நயன்தாரா! வெளியான புதிய புகைப்படம் | Nayanthara Change Thali

இது சர்ச்சையை கிளப்பிய நிலையில், விசாரணை நடத்தப்படும் என தமிழக சுகாதாரத்துறை அறிவித்தது, 6 ஆண்டுகளுக்கு முன்பே பதிவுத்திருமணம் செய்து கொண்டதாகவும், சட்டவிதிகளின்படியே வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டதாகவும் விளக்கம் அளித்தனர்.

இந்நிலையில் நயன்தாராவின் புதிய போட்டோவை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர், அதில் மஞ்சள் கயிறுடன் இருந்த நயன்தாரா, தாலி பிரித்து கோர்த்து தங்க செயினில் போட்டுள்ளார், நயன்தாராவின் இந்த படம் வைரலாகி வருகிறது.