யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ். சி.சிறிசற்குணராஜா மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
![யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் மீது குற்றச்சாட்டு! | Allegation Vice Chancellor Of Jaffna University யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் மீது குற்றச்சாட்டு! | Allegation Vice Chancellor Of Jaffna University](https://cdn.ibcstack.com/article/a17a2c5e-1b66-4283-9d89-b4c796554ecb/22-6366fb74b2a2f.webp)
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியத் தலைவரே இந்த முறைப்பாட்டை வழங்கியுள்ளார். மாணவர்களின் உரிமைக்காகவும் அடக்குமுறைக்கு எதிராகவும் வரைமுறையுடன் செயற்பட்ட தன் மீது பழிவாங்கப் போவதாக துணைவேந்தர் பகிரங்கமாகக் கூறியுள்ளார் என்று முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் மீது குற்றச்சாட்டு! | Allegation Vice Chancellor Of Jaffna University யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் மீது குற்றச்சாட்டு! | Allegation Vice Chancellor Of Jaffna University](https://cdn.ibcstack.com/article/432f60ae-21cd-4fcf-984c-e38a36985fdd/22-6366fb74e1a2b.webp)
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவரின் முறைப்பாடு கிடைக்கப் பெற்றதாகவும் அதுதொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.