வீட்டுப் பெண்களிடம் இப்படித்தான் நடந்து கொள்வேன்… தடவல் மன்னன் அசல் கோளாறின் கதறல் விளக்கம்…

0
666

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டு வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 6. மூன்று வாரங்கள் கடந்த நிலையில் ஜிபி முத்து, சாந்தி மாஸ்டரை தொடர்ந்து கடந்த ஞாயிற்று கிழமை கமல் ஹாசனால் அசல் கோளாறு வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் பெண் போட்டியாளர்களிடம் அத்துமீறி தடவுதல், கிள்ளுதல் என்று தவறான கோணத்தில் நடந்து கொண்டது ரசிகர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது. இதனால் வெறுப்படைந்த பிக்பாஸ் ரசிகர்கள் அசல் கோளாறு வீட்டில் இருக்க வேண்டாம் என்று நினைத்து வெளியேற்றினார்கள்.

இதனை தொடர்ந்து ஒரு நாளைக்கு 15 முதல் 16 ஆயிரம் சம்பளம் என்று 21 நாட்களுக்கு சுமார் 3.36 லட்ச ரூபாயை வாங்கியுள்ளார். இதனை தொடர்ந்து அவர் அளித்த பேட்டியொன்றில், பிக்பாஸ் வீட்டில் நான் செய்தது தவறுதான் என்னை மன்னிக்கவும் என்று கூறியிருந்தார்.

மேலும், என்னை இணையத்தில் மீம்ஸ்-ஆல் ட்ரோல் செய்வது கஷ்டமாக இருந்தது. பெண்களிடம் எந்த தவறான எண்ணத்திலும் நான் தொடவில்லை என்றும் எல்லோரும் என் வீட்டில் இருப்பவர்களை போல் தான் பார்த்தேன்.

அவர்களிடம் எப்படி இருப்பேனோ அப்படி தான் பிக்பாஸ் வீட்டில் இருந்தேன் என்று கூறியுள்ளார் அசல் கோளாறு.