நடிகை சமந்தாவுக்கு myositis என்ற நோய் வந்திருக்கிறது என்றும், அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் தகவல் வெளியானதில் இருந்து ரசிகர்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள்.
சமந்தா விரைவில் குணமடைய வேண்டும் என சிரஞ்சீவி, ஜூனியர் என்டிஆர் உட்பட தெலுங்கு சினிமா நட்சத்திரங்கள் பலரும் ட்விட்டரில் பதிவிட்டனர். ஆனால் சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா எதுவுமே செய்யவில்லை.
நாகர்ஜுனா நேரில் பார்க்கிறாரா?
அவர்கள் ஒரு ட்விட் கூட செய்யவில்லையே என நெட்டிசன்கள் பேசி வருகிறார்கள். இந்நிலையில் தற்போது சமந்தாவின் முன்னாள் மாமனார் நடிகர் நாகார்ஜூனா விரைவில் சமந்தாவை நேரில் சந்திக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
அந்த சந்திப்பில் நாக சைதன்யாவையும் அவர் கூட்டி செல்லலாம் என தெலுங்கு மீடியாக்களில் செய்தி வெளியாகி இருக்கிறது.