மனைவியின் 15 வயது சகோதரிக்கு பாலியல் துஷ்பிரயோகம்; குடும்பஸ்தர் விளக்கமறியலில்!

0
635

தனது மனைவியின் சகோதரியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குடும்பஸ்தர் ஒருவரை எதிர்வரும் 4ஆம் திகதி வரை (04-11-2022) விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் நேற்றைய தினம் (27-10-2022) உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் மன்னார் தாராபுரம் கிராமத்தில் இடம் பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

மன்னார் தாராபுரம் கிராமத்தைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் கடந்த வாரம் காணாமல் போனமை தொடர்பில் குறித்த மாணவியின் பெற்றோர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

மனைவியின் சகோதரியான பாடசாலை மாணவியிடம் கணவர் மேற்கொண்ட கொடூர செயல்! | Mannar Husband Sexually Abused His Wife S Sister

இந்த நிலையில் குறித்த மாணவியை தேடி வந்தனர்.

காணாமல்போன மாணவியின் மூத்த சகோதரியின் கணவர் குறித்த சிறுமி யை தாராபுரம் கிராமத்தில் உள்ள பிரிதொரு வீட்டில் தடுத்து வைத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்துள்ளதாக தெரியவந்தது.

சுமார் 3 தினங்கள் தடுத்து வைக்கப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட தாக தெரியவந்துள்ளது.

மனைவியின் சகோதரியான பாடசாலை மாணவியிடம் கணவர் மேற்கொண்ட கொடூர செயல்! | Mannar Husband Sexually Abused His Wife S Sister

குறித்த மாணவி தடுத்து வைக்கப்பட்ட வீட்டிற்கு இருவர் கண்காணிப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் 3 நாட்களின் பின்னர் குறித்த மாணவி வீடு சென்ற நிலையில், வீட்டுக்குச் சென்ற பொலிஸார் குறித்த சிறுமியை மீட்டுள்ளனர்.

சிறுமியிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின்போது தனது சகோதரியின் கணவரால் தான் தடுத்து வைக்கப்பட்டு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாகவும், மேலும் இருவர் உடந்தையாக இருந்தமையை குறித்த சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். 

மனைவியின் சகோதரியான பாடசாலை மாணவியிடம் கணவர் மேற்கொண்ட கொடூர செயல்! | Mannar Husband Sexually Abused His Wife S Sister

மேலும் குறித்த சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது பல தடவைகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட மை தெரிய வந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தாராபுரம் கிராமத்தைச் சேர்ந்த குறித்த சிறுமியின் சகோதரியின் கணவர் மற்றும் ஏனைய இருவரையும் பொலிஸார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் குறித்த சிறுமியின் சகோதரியின் கணவர் சட்டத்தரணி ஊடாக மன்னார் நீதிமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (27) முன்னிலையானார்.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த நபரை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

https://www.taatastransport.com/