உலக அழிவை துல்லியமாக கணித்த பாபா வங்கா; அதிர்ச்சியூட்டும் கணிப்புகள்!

0
636

நாம் வாழும் உலகம் ஆச்சரியங்களும் மர்மங்களும் நிறைந்தது. உலகில் நம்மை ஆதிக்கம் செலுத்தும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

பல்வேறு மனிதர்கள் வாழும் இந்த உலகில் ஆதிக்க வெறியர்களும் ஆண்டதாக வரலாருகள் கூறுகின்றன. அதோடு பின்னாளில் இடம்பெறவுள்ள பல்வேறு தகவல்களையும், அதிர்ச்சியூட்டும் கணிப்புகளையும் ஜோதிட சாஸ்திரங்கள் கூறினாலும் அதில் சிலவற்றினை நம்புவது கடினமாக தான் உள்ளது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளில், உலகில் கணிப்புகளைக் கேட்கும் மற்றும் படிக்கும் போக்கு அதிகரித்துள்ளது. இவற்றில் பல கணிப்புகளை பிரபல தீர்க்கதரிசியான ‘பாபா வெங்கா’ கூறியுள்ளார்.

2022ஆம் ஆண்டு முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அடுத்து உலகம் எதிர்கொள்ள இருக்கும் பிரச்சனைகள் குறித்த அவருடைய கணிப்பு வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாபா வங்கா யார்?

அந்தவகையில் இந்த உலகம் தொடர்பில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்களை கணித்து கூறிய அந்த பாபா வங்கா யார்? அவரது கணிப்புகள் பல நடந்துகொண்டுள்ளமை பலருக்கும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்துவதால் அவர் பற்றிய தகவல்கள் ஊடங்ககளில் அடிக்கடி வெளியான வண்ணமே உள்ளது.

பாபா வெங்கா கண்தெரியாதவர். பல்கேரியாவைச் சேர்ந்தவர். 1911 ஆம் ஆண்டு பிறந்த இவர் தனது 12வது வயதில் பார்வையை இழந்தார். அவரது கணிப்புகளில் 85 சதவீதம் உண்மையாகிவிட்டன.

இருப்பினும் அவரது சில கூற்றுகளும் தவறானவை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர் கூறிய தீர்க்கதரிசனங்கள் எங்கும் எழுதப்படவில்லை என்றும், இந்த தீர்க்கதரிசனங்களை பாபா வெங்கா தனது சீடர்களுக்குச் சொல்லி அதை எழுதும் வேலையைச் செய்தார் என்றும் கூறப்படுகிறது.

பாபா வெங்கா 1996 ஆம் ஆண்டு இறந்தார், ஆனால் அவர் இறப்பதற்கு முன்பே, அவர் 5079 வரை கணித்துள்ளார். ஏனெனில் அவரது கூற்றுப்படி, இந்த உலகம் 5079-ல் அழியும் எனவும் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

இந்நிலையில் பல்கேரியாவில் பிறந்த பாபா வெங்கா யார் என்பது குறித்த விவரங்களை காணொணி ஊடாக அறிந்துகொள்வோம்.