ஏழாலை பகுதியில் போதை மாத்திரைகளுடன் மூவர்கைது!

0
452

யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் போதை மாத்திரைகளுடன் மூவர் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதான சந்தேக நபர்கள் இராணுவ புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

போதை மாத்திரைகள் மீட்பு

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடம் இருந்து 296 போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

யாழ் ஏழாலையில் புலனாய்வு பிரிவினரிடம் சிக்கிய இளைஞர்கள்! | Drugs Boys Arrest Jaffna

கைது செய்யப்பட்ட மூவரையும் மேலதிக நடவடிக்கைக்காக , இராணுவ புலனாய்வு பிரிவினரால் சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

யாழ் ஏழாலையில் புலனாய்வு பிரிவினரிடம் சிக்கிய இளைஞர்கள்! | Drugs Boys Arrest Jaffna

கைதான சந்தேகநபர்கள் போதைப்பொருள் விற்பனை முகவர்கள் என தாம் சந்தேகிக்கப்பதாகவும், மூவரிடமும் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.