நாட்டில் பாடசாலை மாணவர்களின் வருகை வீழ்ச்சி!

0
484

நாட்டில் பொருளாதார நெருக்கடி குறித்து பெருந்தோட்ட பாடசாலைகளில் மாணவர்களின் வருகை வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை பாடசாலைகளின் ஆசிரியர் குழுவொன்று தெரிவித்துள்ளது.

மக்களின் கருத்து

இந்த நிலை தொடர்பில் மக்கள் கருத்து தெரிவிக்கையில் பல்வேறு பொருளாதார பிரச்சினை காரணமாக ஹட்டன் தோட்ட நகர மற்றும் கிராமிய பாடசாலைகளில் பாடசாலை மாணவர்களின் வருகைப்பற்றாக்குறை காணப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

அத்தோடு பாடசாலைக்கு வரும் சில மாணவர்கள் காலை உணவு எதுவும் இன்றி வருவதாகவும் தோட்டங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் இந்த நிலைமைகள் கடுமையாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலைமைகளால் பாடசாலை மாணவர்களுக்கு உரிய முறையில் கல்வி கற்பிக்க முடியாத நிலை காணப்படுவதாகவும், பிள்ளைகளின் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு தேவையான உணவை முறையாக வழங்க முடியாத நிலையே இதற்கு முக்கிய காரணம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

பாடசாலை மாணவர்களின் வருகையில் வீழ்ச்சி | Decline In School Student Attendance