போதை மாத்திரைகளுடன் 5 பேர் கைது – கோப்பாய் பொலிசார் அதிரடி!

0
347

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வபுரம் மற்றும் ஊரெழு முருகன் வீதி ஆகிய பகுதிகளில் கஞ்சா, ஹெரோயின் மற்றும் போதை மருந்துகளுடன் ஐந்து சந்தேக நபர்கள் நேற்று வெள்ளிக்கிழமை கோப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

கோப்பாய் பொலிஸ் நிலையப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் குறித்த முற்றுகை இடம்பெற்றுள்ளது.

செல்வபுரம் மற்றும் ஊரெழு முருகன் வீதி ஆகிய பகுதிகளில் ஹரோயின் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் வியாபாரிகள் இருவர் உட்பட ஐந்து பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு கோப்பாய் பொலிசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.