ஹாங்காங்கில் கொரோனா வைரஸ் தொற்று பரவலால் சுற்றுலாத்துறை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்து விட்டாலும், சுற்றுலாத்துறை இன்னும் மீளவில்லை. பல விமான நிறுவனங்கள் பயணிகள் இன்றி போராடுகின்றன.
அங்கு, சுற்றுலா பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் அந்த நாட்டிற்கு வரவிரும்புகிற, வந்து திரும்புகிற சுற்றுலா பயணிகளுக்கு 5 லட்சம் விமான டிக்கெட்டுகளை இலவசமாக வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து கட்டுப்பாடுகளையும் அரசு அகற்றிய பின்னர் இலவச விமான டிக்கெட் வழங்குவது பற்றி விமான நிறுவனங்களுடன் கலந்து பேசி இதுதொடர்பாக விளம்பரம் செய்யப்படும் என சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.