ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தங்கம் திருடப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பிலியந்தலை, மகுலுதுவ பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையத்துடன் இணைந்த இல்லம் ஒன்றில் இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டில் யாரும் இல்லாத நிலையில் நேற்று மதியம் இந்த திருட்டுச் சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகின்றது,
வீட்டின் அலமாரியில் இருந்த 66 பவுன் தங்கத்தை சந்தேகநபர்கள் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.