இலங்கைக்கு பெருமை சேர்த்த வீரர்களுக்கு பல மில்லியன் ரூபா வழங்க தீர்மானம்

0
439

2022ஆம் ஆண்டுக்கான ஆசியக்கிண்ண வலைப்பந்தாட்ட தொடரை கைப்பற்றிய இலங்கை மகளிர் அணியின் ஒவ்வொரு வீராங்கனைகளுக்கு 2 மில்லியன் ரூபாவை வழங்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்துடன், வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு 10 மில்லியன் ரூபாவும், வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு 5 மில்லியன் ரூபாவும், அவர்களின் பயிற்சியாளர்களுக்கு 25% வீதமும் விளையாட்டு நிதியிலிருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

கிரிக்கெட், வலைப்பந்தாட்டம்

ஆசியாவின் (கிரிக்கெட், வலைப்பந்தாட்டம்) செம்பியன்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைத்த போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இலங்கை கிரிக்கெட் சபை 5 இலட்சம் அமெரிக்க டொலர்களை மஹரகம வைத்தியசாலைக்கு வழங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery