இலங்கையை காப்பாற்ற வேண்டுமாயின் பொதுத் தேர்தலே தேவை, சர்வஜன வாக்கெடுப்பு அல்ல என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பிலியந்த பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இன்று இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில் சர்வகட்சி வார்த்தை என்ற போர்வையில் அனைவரும் அமைச்சுப் பதவிகளை வைத்து சூதாடுகின்றனர்.