மனநலம் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுவன் தாக்கி பாட்டி மரணம்!

0
475

ஹெம்மாதகம, தல்கஸ்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சிறுவன் ஒருவன் இரும்பு கம்பியால் தாக்கியதில் பாட்டி உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

பாட்டியை தாக்கிய சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்ட 13 வயது என தெரிவிக்கப்படும் அதேசமயம் உயிரிழந்த பாட்டி 81 வயதுடைய மூதாட்டி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  

தாக்கப்பட்டதன் காரணம்

காலை உணவை சாப்பிடுவதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சிறுவன் பாட்டியை இரும்பு கம்பியால் தாக்கியதை அடுத்து பாட்டி உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து சந்தேக நபரான மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

13 வயதுடைய சிறுவன் தாக்கி பாட்டி மரணம் | Grandmother Dies After13 Year Old Boy Attacks Her