மக்கள் வாழ முடியாத நிலையில் அரச அமைச்சர்களின் செயற்குழுவிற்கு 111 வாகனங்கள்

0
349

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர்களின் செயலணிக்கு 111 வாகனங்கள் ஒதுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மக்கள் வாழக் கூட முடியாத நிலையில் 37 இராஜாங்க அமைச்சர்களை நியமிப்பதன் மூலம் நாட்டின் செலவு மேலும் அதிகரிக்கும்.

ஒரு இராஜாங்க அமைச்சருக்கு ஐந்து பேர் கொண்ட தனிப்பட்ட பணியாளர்கள் இருப்பார்கள். அவர்களில் மூவருக்கு அரசு மூன்று வாகனங்களை வழங்கும் என்றும் கூறியுள்ளார்.

வாகனம் வழங்கப்படும் மூவர்

இராஜாங்க அமைச்சருக்கு செயலாளர், செய்தித் தொடர்பாளர் மற்றும் ஒருங்கிணைப்புச் செயலாளர் ஆகியோருக்கு இந்த வாகனங்கள் வழங்கப்படும் என மேலும் தெரிவித்துள்ளார்.